News September 13, 2025

மயிலாடுதுறை: செயற்குழு கூட்டதில் கலந்துகொண்ட அமைச்சர்

image

மயிலாடுதுறை தனியார் அரங்கில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம் சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 13, 2025

தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கிய கலெக்டர்

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் புத்தூர் கிராமத்தில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்தஅவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

News September 13, 2025

புத்தூர்: மருத்துவ முகாம் தொடங்கி வைத்த ஆட்சியர்

image

சீர்காழி, புத்தூர் சீனிவாசா சுப்புராய அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர். நிகழ்வில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பானுமதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

News September 13, 2025

மயிலாடுதுறை உணவு சரியில்லையா? இத பண்ணுங்க!

image

மயிலாடுதுறை மக்களே, உணவுப் பாதுகாப்பு புகார்களுக்கான வாட்ஸ்அப் எண் (9444042322) தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உணவின் தரம், கலப்படம் குறித்த புகார்களை, அந்த எண்ணிற்கு பதிலாக <>TN Food Safety Consumer App<<>> மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய மயிலாடுதுறை மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலகத்தை அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!