News April 11, 2024

நாளை கடைசி: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை

image

தென்கிழக்கு மத்திய ரயில்வே 733 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்ரல் 12) கடைசி நாளாகும். இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான ஐடிஐ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இணையதளம்: <>https://secr.indianrailways.gov.in/<<>>

Similar News

News January 23, 2026

Fast Food உணவு பிரியரா நீங்க.. கொஞ்சம் கவனியுங்க!

image

உ.பி.,யின் அம்ரோஹா பகுதியை சேர்ந்த இல்மா குரேஷி(19), பயங்கரமாக தலைவலிக்கிறது என ஹாஸ்பிடலுக்கு சென்றுள்ளார். MRI ஸ்கேன் எடுத்த போது, அவருக்கு 8 மூளைக் கட்டிகள் இருப்பது தெரியவர, அறுவை சிகிச்சை செய்தும் அவர் மரணமடைந்துள்ளார். இல்மா சாப்பிட்ட துரித உணவின் காரணமாக ஒட்டுண்ணி பாதிப்பு ஏற்பட்டு, அவருக்கு மூளைக்கட்டி வந்திருக்கலாம் என டாக்டர்கள் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. எச்சரிக்கையாக இருங்க மக்களே!

News January 23, 2026

மார்ச்சில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகிறதா?

image

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை பிப்ரவரி 2-வது வாரத்திற்குள் முடிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விருப்ப மனுக்களை பெற்றபிறகு, மார்ச் 8-ல் திருச்சியில் நடைபெறவுள்ள திமுக மாநில மாநாட்டில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வாக்குறுதிகள், விருப்ப மனு என விறுவிறுப்பில் உள்ள அதிமுக, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இனிதான் எடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

News January 23, 2026

இதெல்லாம் பண்றீங்களா? கிட்னி ஸ்டோன் வரும்!

image

உட்கார்ந்தே இருப்பது, தண்ணீர் அருந்துவதையே மறப்பது, நைட் ஷிஃப்டில் பணிபுரிவதால் கிட்னி ஸ்டோன் உருவாகும் ஆபத்து பகல்நேரம் பணிபுரிபவர்களை விட 15% அதிகமாகும் என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இதனை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். நைட் ஷிஃப்ட் பார்ப்பவர்களுக்கு இத SHARE பண்ணுங்க.

error: Content is protected !!