News April 11, 2024
சேலத்தில் காவலர்கள் தபால் வாக்குப்பதிவு

2024 மக்களவைத் தேர்தலையொட்டி, சேலம் அரசு கலைக்கல்லூரி மற்றும் குகை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்குப்பதிவிற்கான வாக்குச்சாவடியில் 1,875 மாநகர காவலர்களும் மற்றும் சேலம் மாவட்ட காவல்துறை மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த சுமார் 2,335 காவலர்கள் என மொத்தம் 4,210 பேர் இன்று வாக்களிக்கவுள்ளனர்.
Similar News
News April 19, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும் காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஏப்ரல்18 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.
News April 19, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலிசார் விவரம்

சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News April 18, 2025
சேலம்: பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை!

சேலம் நாராயண நகரில் 3-வது கிராஸ் பகுதியில் இன்று (ஏப்ரல் 18) பட்டப்பகலில் வீட்டில் புகுந்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த வயதான தம்பதியை மிரட்டி 7 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட்டியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற அம்மாப்பேட்டை காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.