News September 12, 2025

கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (12.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 13, 2025

கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம்!

image

கோவை மாவட்ட நீதிமன்றத் துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று (செப். 13) துவங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நிகழ்வு, நாளை சனிக்கிழமை காலை 9.30 மணியளவில், கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா இந்த நிகழ்வை துவங்கி வைக்க உள்ளார்.

News September 12, 2025

கோவை தங்க கொள்ளை வழக்கில் மேலும் இருவர் கைது!

image

கோவை அருகே ரூ.1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் போலீசார் மேலும் இருவரை வாளையார் சோதனைச் சாவடியில் கைது செய்தனர். பாலக்காட்டை சேர்ந்த சதாம் உசேன், கொல்லத்தை சேர்ந்த ரோஷன் என்போர் தங்கம் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என உறுதி செய்யப்பட்டது. மேலும், இதுவரை கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8 என போலீசார் தெரிவித்துள்ளனர்.

News September 12, 2025

கோவையில் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி!

image

கோவை, தமிழக பழங்குடியினர் நலத்துறை மற்றும் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் சார்பில், பழங்குடியினர் இளைஞர்களுக்கு டிராக்டர் முதல் டிரோன் வரை வேளாண் கருவி பழுதுபார்ப்பு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குழுக்கள் செப்.15, அக்.15, நவ.15, பெண்களுக்கு டிச.15–ஜன.14. மேலும் விவரங்களுக்கு: 0422-2472624, 9003631865.

error: Content is protected !!