News September 12, 2025

புதுவை EX CM பொய் பேசுவதை நிறுத்த வேண்டும்!

image

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், EX CM நாராயணசாமியின் தவறான பொய் குற்றச்சாட்டுகளுக்கு அரசின் சார்பில் பதில் அளிக்காததால், தொடர்ந்து பொய் பேசுவதையே வழக்கமாக நாராயணசாமி கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தனது 5ஆண்டு கால திமுக.காங் கூட்டணி ஆட்சியையும் தற்போதைய தேசிய ஜனநாயக ஆட்சியையும் நாராயணசாமி ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.

Similar News

News September 13, 2025

புதுவை அரசு பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம்

image

பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றம் திறப்பு விழா நடந்தது. தமிழ் துறை சார்பில், பாரதியாரின் 104ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தமிழ் இலக்கிய மன்றம் திறப்பு விழா, நல்லாசிரியர் விருது பெற்ற கலவை கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ஜெஸ்டின் ஆரோக்கியத்திற்குப் பாராட்டு விழா நடந்தது.

News September 13, 2025

புதுச்சேரி கலால் துறை முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி கலால் துறை நேற்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு எந்த மதுபானமும் விற்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து வகையான மதுபான வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள், சாராயம் மற்றும் மது கடைகளுக்கு கலால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News September 13, 2025

புதுவை: பெண்ணை தாக்கி பணம், நகை பறிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி, நேற்று முன்தினம் காலை புதுவை மீன் மார்க்கெட் செல்ல கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகில் பஸ் ஏற நின்றபோது, ஸ்கூட்டியில் வந்த மர்ம நபர் ஒருவர், தமிழரசிக்கு லிப்ட் கொடுப்பதாகக்கூறி ஏற்றி சென்று; இ.சி.ஆரில் அவரை தாக்கி ரூ.1,500 மற்றும் 1 கிராம் நகையை பறித்து சென்றதாக அவர் கொடுத்த புகாரின் பேரில், கோட்டகுப்பம் போலீசார் தமிழ்ச்செல்வன் என்பவரை கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!