News September 12, 2025
திருவண்ணாமலை குரங்கு கடித்து பெண் உயிரிழப்பு

தி.மலை வ.உ.சி. நகரை சேர்ந்த உஷா (47) கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்தபோது குரங்கு கடித்து காயமடைந்தார். ஆரம்ப சிகிச்சைக்கு பின் மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி (செப்டம்பர் 11) உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பபகுதி மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 12, 2025
தி.மலை: உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாநகராட்சி பெருங்குப்பை உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் இன்று கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மண்டபத்தில், இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, துணை மேயர் ராஜாங்கம், திமுக நகரச் செயலாளர் கார்த்திக் வேல்மாறன், ஹோட்டல் உரிமையாளர்கள், வியாபார சங்கங்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News September 12, 2025
எம்பி., தரணிவேந்தன் திறந்து வைத்த கொள்முதல் நிலையம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி கொவலை ஊராட்சியில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை (செப்.12) இன்று ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தரணிவேந்தன், எம்எல்ஏ அம்பேத்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் விவசாய பெரு மக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
News September 12, 2025
தி.மலை: கோர்டில் கேஸ் நிலுவையில் இருக்கா?

தி.மலை மாவட்டதில் நாளை(13.09.2025) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் லோக் அதலாத் நீதிமன்றம் நடைபெற உள்ளது. சாலை விபத்து, போக்குவரத்து அபராதம், மின் கட்டணம், நிலத்தகராறு, ஜீவனாம்சம், தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக்கடன், வங்கிக்கடன் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள், செக் மோசடி, நுகர்வோர் போன்ற நிலுவையில் உள்ள சிறு வழக்குகளுக்கு இங்கு சென்று தீர்வு காணலாம்.