News September 12, 2025
தி.மலை: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு ரூ.6 கோடியில் வணிக வளாகம் கட்ட அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்.11 விசாரணைக்கு வந்தது. கடைகள் பக்தர்களின் நெரிசலுக்கு காரணம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் வணிக வளாக வரைபடத்தை தாக்கல் செய்ய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிட்டு, விசாரணை செப்.25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News September 12, 2025
எம்பி., தரணிவேந்தன் திறந்து வைத்த கொள்முதல் நிலையம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி கொவலை ஊராட்சியில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை (செப்.12) இன்று ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தரணிவேந்தன், எம்எல்ஏ அம்பேத்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் விவசாய பெரு மக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
News September 12, 2025
தி.மலை: கோர்டில் கேஸ் நிலுவையில் இருக்கா?

தி.மலை மாவட்டதில் நாளை(13.09.2025) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் லோக் அதலாத் நீதிமன்றம் நடைபெற உள்ளது. சாலை விபத்து, போக்குவரத்து அபராதம், மின் கட்டணம், நிலத்தகராறு, ஜீவனாம்சம், தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக்கடன், வங்கிக்கடன் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள், செக் மோசடி, நுகர்வோர் போன்ற நிலுவையில் உள்ள சிறு வழக்குகளுக்கு இங்கு சென்று தீர்வு காணலாம்.
News September 12, 2025
தி.மலை: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும்.பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் 5 சதவீதம் செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <