News September 12, 2025
மகளிர் உலகக் கோப்பையில் 2 தமிழச்சிகள்

மகளிர் ODI உலகக் கோப்பை தொடர், செப்.30-ல் தொடங்குகிறது. முதல்முறையாக இந்த மகளிர் கிரிக்கெட் WC தொடரில் மகளிர் மட்டுமே அம்பயர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் தமிழர்கள் ஆவர். இந்தியா சார்பில் விருந்தா ரதியுடன் N ஜனனி, காயத்ரி வேணுகோபாலன் ஆகிய தமிழர்களும் கள மற்றும் டிவி நடுவர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்கள் பல சர்வதேச போட்டிகளிலும் நடுவர்களாகவும் இருந்துள்ளனர்.
Similar News
News September 12, 2025
முடி கொட்டுதா? குளிக்கும்போது இதெல்லாம் பண்ணாதீங்க!

➤சூடான நீரில் குளிப்பது தலை முடிக்கு நல்லதல்ல. ➤தலைக்கு நேரடியாக ஷாம்பு பயன்படுத்த வேண்டாம். அதனை தண்ணீரில் கலந்த பிறகு தலையில் தேய்க்கவும். ➤சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. ➤தலைக்கு குளிப்பதற்கு முன், தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் முடியின் வேர் பலப்படும். ➤குளித்த பிறகு துண்டால் முடியை அழுத்தி தேய்க்க வேண்டாம். SHARE IT.
News September 12, 2025
தொண்டர்களுக்கு தவெக போட்ட ரூல்ஸ்

மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் இருந்து விஜய் நாளை தொடங்குகிறார். தொண்டர்கள் சில நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு தவெக அறிவுறுத்தியுள்ளது. *விஜய்யின் வாகனத்தை பின்தொடர கூடாது *அனுமதியின்றி அலங்கார வளைவுகள், பேனர்கள் வைக்கக் கூடாது* கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்கு வர வேண்டாம் *மரங்கள் மீது ஏறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (பிரசார வாகன போட்டோஸ் மேலே கொடுக்கப்பட்டுள்ளது)
News September 12, 2025
BREAKING: அண்ணாமலை விலகலா? பாஜகவில் சலசலப்பு

பதவி மாற்றப்பட்டதில் இருந்தே, அண்ணாமலை அமைதியான போக்கை கடைபிடித்து வருகிறார். அண்மையில், <<17671440>>திமுகவை பாராட்டி<<>> பேசிய அவர், துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நிலம் வாங்கியதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக என்பதை எங்கேயும் குறிப்பிடவில்லை. Ex IPS என்றே குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் கட்சியில் இருந்து விலகுகிறாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுந்துள்ளது.