News September 12, 2025

புதுவை: ஓட்டல் கேஷியர் மயங்கி விழுந்து பலி

image

புதுச்சேரி, சுபையா சாலையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர், சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் கேஷியராக பணி செய்து வந்தார். விடுமுறைக்கு புதுச்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து குளியல் அறைக்கு சென்ற அவர், திடீரென மயங்கி விழுந்துள்ளார். குடும்பத்தார் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 12, 2025

டென்னிஸ் விளையாடிய முதக்வர் ரங்கசாமி

image

புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி இன்று கோரிமேடு என்.ஆர் டென்னிஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடி போட்டியினை தொடங்கி வைத்தார். மேலும் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பூங்கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

News September 12, 2025

புதுவை EX CM பொய் பேசுவதை நிறுத்த வேண்டும்!

image

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், EX CM நாராயணசாமியின் தவறான பொய் குற்றச்சாட்டுகளுக்கு அரசின் சார்பில் பதில் அளிக்காததால், தொடர்ந்து பொய் பேசுவதையே வழக்கமாக நாராயணசாமி கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தனது 5ஆண்டு கால திமுக.காங் கூட்டணி ஆட்சியையும் தற்போதைய தேசிய ஜனநாயக ஆட்சியையும் நாராயணசாமி ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

அடாக் அடிப்படையில் 3 பிசிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

image

புதுச்சேரியை சேர்ந்த 3 பிசிஎஸ் அதிகாரிகளுக்கு என்ட்ரி கிரேடில் அடாக் அடிப்படையில் பதவி அளித்து, துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிசி எஸ் அதிகாரிகள் அர்ஜூன் ராமகிருஷ்ணன், ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநராகவும், முரளிதரன் சுற்றுலா துறை இயக்குநராகவும், மோகன்குமார் மாகே மண்டல நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவினை கவர்னரின் ஆணைப்படி சார்பு செயலர் ஜெய் சங்கர் பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!