News September 12, 2025
தி.மலை: மான் வேட்டையாடிய நபர் கைது

தண்டராம்பட்டு அடுத்த சொர்ப்பனந்தல் பகுதியில் மான் வேட்டை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சாத்தனூர் அணை வனச்சரக அலுவலர் தலைமையிலான குழு ரோந்து சென்றது. அப்போது, வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான பெருமாள் என்பவர் மான் வேட்டையாடியது தெரியவந்தது. அவரிடமிருந்து மான் இறைச்சி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வனத்துறையினர் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News September 12, 2025
தி.மலை: கோர்டில் கேஸ் நிலுவையில் இருக்கா?

தி.மலை மாவட்டதில் நாளை(13.09.2025) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் லோக் அதலாத் நீதிமன்றம் நடைபெற உள்ளது. சாலை விபத்து, போக்குவரத்து அபராதம், மின் கட்டணம், நிலத்தகராறு, ஜீவனாம்சம், தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக்கடன், வங்கிக்கடன் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள், செக் மோசடி, நுகர்வோர் போன்ற நிலுவையில் உள்ள சிறு வழக்குகளுக்கு இங்கு சென்று தீர்வு காணலாம்.
News September 12, 2025
தி.மலை: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும்.பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் 5 சதவீதம் செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <
News September 12, 2025
தி.மலை: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தக்காளி, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுகள், மா, கொய்யா, சீதாப்பழம், பப்பாளி, முருங்கை மரக்கன்றுகள், அழகு செடிகள், மூலிகைச் செடிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நேரடியாகவும், அரசு மானியத்திலும் வழங்கப்படுகிறது. மேலும் விழாக்களில் பரிசாக மரக்கன்றுகள் வழங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஊக்குவிக்கப்படுகிறது என ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.


