News September 12, 2025
திண்டுக்கல்: மிளகாய் பொடி தூவி நகைக் கொள்ளை!

திண்டுக்கல்: பாகாநத்தத்தில் கூரைக் கொட்டகையில் டீக்கடை நடத்தியபடி தனியே வசிப்பவர் அய்யம்மாள்(87). நேற்று(செப்.11) அதிகாலை 4:30 மணிக்கு கடையை திறந்த போது 2 பேர் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இதில், கரூரில் தலைமறைவாக இருந்த பாகாநத்தத்தை சேர்ந்த 35 வயது பெண், அவரது மகனான 12ஆம் வகுப்பு மாணவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 12, 2025
திண்டுக்கல்: பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்!

திண்டுக்கல்: வேடசந்தூரைச் சேர்ந்த கார்த்திக் ஓராண்டிற்கு முன்பாக கன்னியாகுமரி, கருங்கல் அருகே பாலூர் காட்டுவிளை என்ற பகுதியை சேர்ந்த ஜெய அன்னாள்(20) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கடந்த 40 நாட்களுக்கு முன்பாக குழந்தை பிறந்ததிலிருந்தே கணவர் தன்னுடன் பேசுவதில்லை என்பதற்காக குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
News September 12, 2025
திண்டுக்கல்: இலவச பயிற்சியுடன் வேலை வாய்ப்பு!

திண்டுக்கல் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்<
News September 12, 2025
திண்டுக்கல்: துணி காய வைத்த பெண் கரண்ட் தாக்கி பலி!

திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் வீட்டில் இரும்பு கம்பியில் ஈரத் துணியை காய வைத்தபோது மின்சாரம் தாக்கி ஜோதி என்ற பெண் உயிரிழந்தார். ஜோதியை காப்பாற்றச் சென்ற அவரது மகன் சவுந்தரபாண்டி, மகள் ராஜேஸ்வரி ஆகியோரும் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.