News September 12, 2025
விழுப்புரம்: அரசு வேளாண் கல்லூரி அமைக்க கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. இங்குள்ள மாணவர்கள் வேளாண் சார்ந்த பின்புலத்தில் வளர்வதால், வேளாண் படிப்பில் சேர விரும்புகின்றனர். இம்மாவட்ட மாணவர்கள் வேளாண் படிப்பிற்காக கோயம்புத்துார், சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லுாரி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Similar News
News November 17, 2025
விழுப்புரம்: கை துண்டாகி கிடந்த நபர்!

விழுப்புரம்: பானாம்பட்டை சேர்ந்வர் அசோக். இவர், நேற்று (நவ.16) அங்குள்ள ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற ரயில், அவர் மீது மோதியது. இதில், அசோக் இடது கை துண்டாகி மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
News November 16, 2025
பட்டனூர்: SIR பணிகளை ஆட்சியர் ஆய்வு

வானூர் வட்டம் பட்டானூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் உள்ளீடு செய்யும் பணியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி வாக்குப்பதிவு அலுவலர் வித்தியாதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
News November 16, 2025
பருவ மழை பாதுகாப்பு பணிகளை ஆட்சியர் ஆய்வு

வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையையொட்டி, முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளுக்கான சிறப்பு தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டார வள அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் இருந்தனர்.


