News September 12, 2025

திண்டுக்கல்: பட்டாவில் பெயர் சேர்க்கனுமா? எளிய வழிமுறை

image

▶️திண்டுக்கல் மக்களே.., உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.
▶️இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது.
▶️இதற்கு <>Citizen Portal<<>> வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள இசேவை மையத்தை அணுகலாம்.
▶️ உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம்.
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 12, 2025

திண்டுக்கல்: பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்!

image

திண்டுக்கல்: வேடசந்தூரைச் சேர்ந்த கார்த்திக் ஓராண்டிற்கு முன்பாக கன்னியாகுமரி, கருங்கல் அருகே பாலூர் காட்டுவிளை என்ற பகுதியை சேர்ந்த ஜெய அன்னாள்(20) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கடந்த 40 நாட்களுக்கு முன்பாக குழந்தை பிறந்ததிலிருந்தே கணவர் தன்னுடன் பேசுவதில்லை என்பதற்காக குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

News September 12, 2025

திண்டுக்கல்: இலவச பயிற்சியுடன் வேலை வாய்ப்பு!

image

திண்டுக்கல் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 12, 2025

திண்டுக்கல்: துணி காய வைத்த பெண் கரண்ட் தாக்கி பலி!

image

திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் வீட்டில் இரும்பு கம்பியில் ஈரத் துணியை காய வைத்தபோது மின்சாரம் தாக்கி ஜோதி என்ற பெண் உயிரிழந்தார். ஜோதியை காப்பாற்றச் சென்ற அவரது மகன் சவுந்தரபாண்டி, மகள் ராஜேஸ்வரி ஆகியோரும் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!