News September 12, 2025
வன்முறைக்கு பிறகு மணிப்பூர் செல்லும் PM மோடி!

வன்முறைக்கு பிறகு முதல் முறையாக நாளை, PM மோடி மணிப்பூர் செல்ல உள்ளார். இம்பாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் ₹1,200 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, ₹7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 2023 மே மாதம் மெய்தேய் – குக்கி சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறையில் 260 பேர் கொல்லப்பட்டனர். அச்சத்தில் மோடி, மணிப்பூர் செல்வதை தவிர்ப்பதாக காங்., சாடியிருந்தது.
Similar News
News September 12, 2025
‘மாணவர்கள் மட்டும்’ பஸ்கள்: பாராட்டிய CM ஸ்டாலின்

சென்னையில், சமீபத்தில் பள்ளி மாணவர்கள் மட்டும் பயணிக்கும் வகையில், சிறப்பு பஸ் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், ‘மாணவர்கள் மட்டும்’ சிறப்பு பஸ் திட்டத்தை போக்குவரத்து அமைச்சரும், அதிகாரிகளும் விழிப்புடன் கண்காணித்து மேலும் மேலும் சிறப்பாக செயல்படுத்திட வாழ்த்துவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
சிம்பு மேல தப்பில்ல: அஷ்வத்

‘STR 51’ ஷூட்டிங் இன்னும் தொடங்காததற்கு சிம்பு காரணமல்ல, தான் திரைக்கதை எழுதுவதில் தொய்வு ஏற்பட்டதாலேயே தாமதமாவதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். குத்து, தம், மன்மதன் காலகட்ட சிம்புவை மீண்டும் அனைவரும் ரசிக்கும்படி திரையில் கொண்டுவர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படம் 2026-ல் ரிலீஸாகும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதனால், சிம்பு ரசிகர்கள் படுகுஷியாக உள்ளனர்.
News September 12, 2025
அற்புதம்.. 6.2 கிலோவில் பிறந்த ‘பீம் பாய்’

பிறந்த குழந்தைகளின் எடை, வழக்கமாக 2.5- 3.2 கிலோ வரை இருக்கும். ஆனால், கடந்த வாரம் ம.பி.யில் பெண்ணுக்கு <<17618155>>5.2 கிலோ எடையில்<<>> ‘பீம் பாய்’ குழந்தை பிறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது, அதனை மிஞ்சும் சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. புளோரிடாவில் டேனியல்லா ஹைன்ஸ் என்பவர் 6.2 கிலோ எடையுள்ள குழந்தையை ஈன்றுள்ளார். போட்டோஸ் SM-ல் பரவியதால், ஓவர் நைட்டில் அந்த குழந்தை பிரபலமாகியுள்ளது.