News September 12, 2025
தி.மலை இளைஞர்களே வேலை ரெடியா இருக்கு!

திருவண்ணாமலை வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், நாளை(செப்.12) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 5,000-க்கும் அதிகமான பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொள்ளலாம்.
Similar News
News September 12, 2025
தி.மலை: கோர்டில் கேஸ் நிலுவையில் இருக்கா?

தி.மலை மாவட்டதில் நாளை(13.09.2025) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் லோக் அதலாத் நீதிமன்றம் நடைபெற உள்ளது. சாலை விபத்து, போக்குவரத்து அபராதம், மின் கட்டணம், நிலத்தகராறு, ஜீவனாம்சம், தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக்கடன், வங்கிக்கடன் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள், செக் மோசடி, நுகர்வோர் போன்ற நிலுவையில் உள்ள சிறு வழக்குகளுக்கு இங்கு சென்று தீர்வு காணலாம்.
News September 12, 2025
தி.மலை: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும்.பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் 5 சதவீதம் செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <
News September 12, 2025
தி.மலை: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தக்காளி, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுகள், மா, கொய்யா, சீதாப்பழம், பப்பாளி, முருங்கை மரக்கன்றுகள், அழகு செடிகள், மூலிகைச் செடிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நேரடியாகவும், அரசு மானியத்திலும் வழங்கப்படுகிறது. மேலும் விழாக்களில் பரிசாக மரக்கன்றுகள் வழங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஊக்குவிக்கப்படுகிறது என ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.