News April 11, 2024
தனியார் நிதி நிறுவனம் குறித்து புகார் அளிக்கலாம்

கோவை சாய்பாபா காலனி பகுதியில் ட்ரீம் மார்க்கர்ஸ் குளோபல் பி லிட் என்ற நிதி நிறுவனம் மக்களிடமிருந்து முதலீட்டை பெற்று இரட்டிப்பாக திருப்பி தருவதாக கூறி, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளது. இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்கலாம் என கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Similar News
News September 26, 2025
கோவை கலெக்டர் ஆப்பீஸ்க்கு 7வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை தெற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று 7வது முறையாக மீண்டும் மிரட்டல் வந்ததால் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ச்சியான மிரட்டலால் அப்பகுதியில் மீண்டும் பதட்டம் நிலவியது.
News September 26, 2025
அடையாளம் தெரியாத இளைஞர் ரயில் மோதி பலி

கோவை ரயில்வே காவல் போலீசார் இன்று கூறியதாவது.. ஆவாரம்பாளையம் முதல், பீளமேடுக்கு இடையே, உள்ள தண்டவாளத்தில் அந்த வழியாக சென்ற, ரயிலில், அடிபட்டு சுமார், 30 வயது மதிக்கத்தக்க, முகவரி தெரியாத ஆண் நபர் இறந்துள்ளார். கோவை ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.
News September 26, 2025
கனிமவள கொள்ளையை தடுக்க சிசிடிவி பொருத்தம்!

கோவை மாவட்டத்தில் பேரூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, கோவை வடக்கு ஆகிய தாலுகாக்களில் சில ஆண்டுகளாகவே கனிம வள கொள்ளை நடந்து வருகிறது. இதனை தடுக்க கோவை மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதி ரூ.1.80 கோடியில் அதிநவீன ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் தற்போது கிணத்துக்கடவு பகுதியில் 8 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.