News September 12, 2025

தி.மலை: போக்ஸோ வழக்கில் 20 ஆண்டு சிறை

image

வந்தவாசி அருகே அருங்குணத்தை சேர்ந்த தொழிலாளி சதீஷ் (35), 2018ல் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், தி.மலை அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். நீதிபதி காஞ்சனா, (செப்டம்பர் 10) அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ₹15,000 அபராதமும் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹1 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.

Similar News

News September 12, 2025

திருவண்ணாமலை குரங்கு கடித்து பெண் உயிரிழப்பு

image

தி.மலை வ.உ.சி. நகரை சேர்ந்த உஷா (47) கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்தபோது குரங்கு கடித்து காயமடைந்தார். ஆரம்ப சிகிச்சைக்கு பின் மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி (செப்டம்பர் 11) உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பபகுதி மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 12, 2025

தி.மலை: பத்திரம் தொலைந்தால்… இதை செய்யுங்க

image

திருவண்ணாமலை மக்களே, நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். இந்த <>இணையதளம் மூலம்<<>> பத்திரம் மட்டுமல்லாமல் நிலம் குறித்த பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் எளிதாக பெறலாம். SHARE பண்ணுங்க

News September 12, 2025

தி.மலை: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு ரூ.6 கோடியில் வணிக வளாகம் கட்ட அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்.11 விசாரணைக்கு வந்தது. கடைகள் பக்தர்களின் நெரிசலுக்கு காரணம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் வணிக வளாக வரைபடத்தை தாக்கல் செய்ய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிட்டு, விசாரணை செப்.25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

error: Content is protected !!