News September 12, 2025

சாதிய கொடுமை தலை விரித்தாடுகிறது: திருமாவளவன்

image

தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலை விரித்தாடுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையிலும் சாதிய கொடுமைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். எனவே, ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.

Similar News

News September 12, 2025

BREAKING: கடன் கட்டாவிட்டால் செல்போன் இயங்காது

image

கடனை முறையாக திருப்பி செலுத்த தவறுவோரின் செல்போன் இயக்கத்தை முடக்குவதற்கு RBI அனுமதி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருள்களை பலரும் கடனில் வாங்குகின்றனர். ஆனால், பலரும் அந்த கடனை திருப்பி கட்டாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தனிநபர் தகவல்கள் ரகசியமாக காக்கவும் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இந்த முடிவு பற்றிய உங்கள் கருத்து என்ன?

News September 12, 2025

வன்முறைக்கு பிறகு மணிப்பூர் செல்லும் PM மோடி!

image

வன்முறைக்கு பிறகு முதல் முறையாக நாளை, PM மோடி மணிப்பூர் செல்ல உள்ளார். இம்பாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் ₹1,200 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, ₹7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 2023 மே மாதம் மெய்தேய் – குக்கி சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறையில் 260 பேர் கொல்லப்பட்டனர். அச்சத்தில் மோடி, மணிப்பூர் செல்வதை தவிர்ப்பதாக காங்., சாடியிருந்தது.

News September 12, 2025

E20 பெட்ரோல் என்றால் என்ன? இதனால் என்ஜின் பழுதாகிறதா?

image

இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோலில், 20% எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கு எட்டப்பட்டுவிட்டதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. E20 எனப்படும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் என்றால் என்ன? இதனால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பா? இதற்கு அரசு கூறும் விளக்கம் என்ன? டீசலில் இந்த கலப்பு உள்ளதா என்பதை மேலே Swipe செய்து பாருங்கள். உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

error: Content is protected !!