News September 12, 2025
திண்டுக்கல் அருகே கிணற்றில் விழுந்து பலி

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து அருகே அருள்சாமி (65) என்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்சாமியின் உடலை மீட்டனர். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
Similar News
News September 12, 2025
திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு!

திண்டுக்கல்: ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக, தொழில் முனைவுத் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் மற்றும் PM-AJAY போன்ற திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவர்கள் அருகமையில் இருக்கும் இ-சேவை மையத்தின் வாயிலாக இவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (செப்.10) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
திண்டுக்கல்: வங்கி வேலை வேண்டுமா? APPLY NOW!

திண்டுக்கல் மக்களே, மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 349 (Deputy General Manager, Assistant General Manager, Chief Manager, Senior Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 – ரூ.1,56,500 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <