News September 11, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 12, 2025
கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்கள்: போலீசார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடற்கரையில் கடலில் மிதந்து வந்த 20 பார்சல்களை இன்று (செப்.,11) மீன்வளத் துறையினர் கைப்பற்றினர். அதில் 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதை போலீசாரிடம் ஒப்படைத்து போலீசார் கஞ்சா மூட்டைகளை கடத்தியது யார்?, அதை கடலில் தூக்கி வீசியவர்கள் யார்? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News September 11, 2025
புதுக்கோட்டை: இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !
News September 11, 2025
புதுகை : நாளை எங்கெல்லம் முகாம் தெரியுமா?

புதுக்கோட்டை ஒன்றியத்தில் பெருங்கொண்டான் விடுதி, குன்றாண்டார் கோவில் ஒன்றியம் வந்தனாக்கோட்டை, அன்னவாசல் ஒன்றியம் வீரப்பட்டி, அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரம், அரிமளம் ஒன்றியம் இசேவை மையக்கட்டிடடம், பொன்னமராவதி பேரூராட்சி அம்மன் சமுதாயகூடம் உள்ளிட்ட இடங்களில் நாளை(செப்.12) நடக்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் மு.அருணா அழைப்பு விடுத்துள்ளார்.