News September 11, 2025

அடுத்தடுத்த மாநாடுகளை அறிவித்த சீமான்

image

ஏற்கனவே மரம், ஆடு, மாடுகளின் மாநாட்டை நடத்தி முடித்துள்ள சீமான், அடுத்தடுத்த மாநாடுகளை அறிவித்துள்ளார். தருமபுரியில் மலைகளின் மாநாடு, தூத்துக்குடியில் கடல் மாநாடு மற்றும் தஞ்சையில் தண்ணீரின் மாநாடு நடத்தப்போவதாகவும், ஐம்பூதங்கள் இல்லாமல் பூமியில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீமானின் அடுத்தடுத்த மாநாடுகள் குறித்து உங்க கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News September 12, 2025

ஷிவம் துபே தொட்டதெல்லாம் துலங்கும்

image

ஷிவம் துபே பிளேயிங் 11-ல் இடம்பெற்ற பெரும்பாலான போட்டிகளில் இந்தியா தோற்றதே கிடையாதாம். ஆம்.. டி20 கிரிக்கெட்டில் ஷிவம் துபே இந்தியாவுக்காக 36 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் தொடர்ச்சியாக 31 போட்டிகளில் இந்தியா தோற்கவே இல்லை. ஏறக்குறைய 6 ஆண்டுகளாக இந்த சாதனை தொடர்கிறது. இதனால் ரசிகர்கள் அவரை லக்கி ராம் துபே என செல்லமாக அழைக்க தொடங்கியுள்ளனர்.

News September 12, 2025

ALERT: தூங்கும் போது போனை பக்கத்தில் வைக்கிறீர்களா?

image

இரவு போனை பக்கத்திலேயே வைத்து தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. அப்போது என்ன நடக்கிறது தெரியுமா? *நீங்க போனை யூஸ் செய்யலைனாலும், அது ஆக்டிவாகவே இருக்கும் *நீல ஒளி, மின்காந்த அலைகளை வெளிவிட்டுக் கொண்டிருக்கும் *மெலட்டோனின் ஹார்மோனை பாதிக்கும் *இதனால் நினைவாற்றல், கவனம் சிதறும் *ஆழமான தூக்கம் பாதிக்கும், மறுநாள் சோர்வு, பதற்றம் ஏற்படும். இதை தடுக்க, போனை பல அடி தூரம் தள்ளி வைக்கணும். செய்வீர்களா?

News September 12, 2025

டெட் தேர்வுக்கு 4.8 லட்சம் பேர் விண்ணப்பம்

image

டெட் தேர்வுக்கு சுமார் 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில் போட்டி போட்டு பலரும் விண்ணப்பித்துள்ளனர். இம்முறை, இதற்கு முன்பு நடந்த 4 டெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவை காட்டிலும் அதிகம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டெட் தேர்வு நவ.15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!