News September 11, 2025
சிறுபான்மையினருக்கு ரூ.20.54 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், சிறுபான்மையின மக்களின் கருத்துருக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறியவும் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜோ.அருண் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் 141 பயனாளிகளுக்கு ரூ.20.54 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Similar News
News September 12, 2025
பெரம்பலூர்: விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கல்

பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் செப்.,13-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதியில் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், பின்பு பிரச்சாரத்தை துறையூர் சாலை மேற்கு வானொலி திடல் பகுதியில் நடத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
News September 11, 2025
முகாமினை ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்

இன்று (11.09.2025) பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமாந்துறை மற்றும் பென்னகோணம் ஊராட்சி களுக்கு திருமாந்துறை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் உங்களுடைன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் திடீரென போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் திடீர் ஆய்வு செய்தார்.
News September 11, 2025
பெரம்பலூர்: பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !