News September 11, 2025

ஒசூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்

image

ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில், சுமார் 2,000 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த விமான நிலையம் அமைப்பதற்கான இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இது ஒசூர் பகுதிக்கு ஒரு முக்கியமான வளர்ச்சி திட்டமாகும்.

Similar News

News September 11, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்‌

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப். 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News September 11, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 10) மொத்தம் 296.7 மி.மீ மழை பதிவானது. இதில், ஓசூர் பகுதியில் அதிகபட்சமாக 49.2 மி.மீ மழையும், கே.ஆர்.பி அணையில் 59.2 மி.மீ மழையும் பதிவானது. அதேபோல், ராயக்கோட்டையில் 27 மி.மீ மழையும், கெலவரப்பள்ளி அணையில் 26 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது.

News September 11, 2025

தமிழக முதல்வரின் கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகள் ரத்து

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப். 11) மற்றும் நாளை (செப். 12) நடைபெறவிருந்த நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளார். அவரது மருமகன் சபரீசனின் தந்தை காலமானதால், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க, ஒசூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை புறப்படுகிறார். ஒத்திவைக்கப்பட்ட கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!