News September 11, 2025

அரியலூர்: பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !

Similar News

News September 11, 2025

அரியலூரில் நிமிர்ந்து நில் திட்டப் பயிற்சி தொடக்கம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாடு (EDII TN) சார்பில், தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிமிர்ந்து நில் நிகழ்ச்சி உயர் கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சியாக தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தொடங்கி வைத்தார்.

News September 11, 2025

இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி கல்லூரி முதல்வர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

News September 11, 2025

அரியலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் அவர்கள் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி முன்னிலை வகித்தார்.

error: Content is protected !!