News September 11, 2025
மயிலாடுதுறை மக்களே… இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !
Similar News
News September 12, 2025
மயிலாடுதுறையில் இளையோருக்கான தடகள போட்டி

மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் கடந்த 6ம் தேதி சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருந்தது. மழையின் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வருகிற 13ம் தேதி போட்டிகள் நடைபெற உள்ளது.இதில் 14, 16 , 18, 20 வயதிற்கு உட்பட்டோர் என 4 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டிகளில், வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் என மாவட்ட தடகள சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
மயிலாடுதுறை: ரூ.78,450 சம்பளத்தில் வேலை!

மயிலாடுதுறை மக்களே, இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 ஆம் ஆண்டிற்கான 120 அதிகாரிகளுக்கான (Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.78,450 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <
News September 11, 2025
மயிலாடுதுறை: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகளிடமிருந்து குறுவை நெற்பயிர் கொள்முதல் செய்யப்படுவதை ஆய்வு செய்து கொள்முதல் நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளின் விவரம் மற்றும் நெல்லின் தரம் குறித்து ஆய்வு செய்தார். நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நலினா உடன் இருந்தார்.