News September 11, 2025
சென்னையில் தூய்மை பணியாளர்களின் சம்பளம் உயர்வு

ராயபுரம் மற்றும் திருவி.க.நகர் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் தினசம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி பணியின் வகைபோல் தினசம்பளம் ரூ.761 முதல் ரூ.965 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மாத வருமானம் சுமார் ரூ.19,700 முதல் ரூ.25,000 இருக்கும். ஊழியர்களுக்கு கட்டண விடுப்பு, காப்பீடு, மருத்துவ பரிசோதனை, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவைகளும் வழங்கப்பட உள்ளன.
Similar News
News September 11, 2025
சென்னையில் 6 மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை சென்ட்ரல்-கூடுர் பிரிவில் எண்ணூர்-அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 6 மின்சார ரெயில்கள் முழுவதும் இன்று இரவு 10.30 மணி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 11.20 மணிக்கு புறப்படும்.
News September 11, 2025
சென்னை மெட்ரோ பச்சை வழித்தட சேவையில் தற்காலிக மாற்றம்

மெட்ரோ ரயில் 2ம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக, பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை (செப்.15 -19) வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, காலை 5 மணி முதல் 6 மணி வரை இந்தப் பகுதியில் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 6 மணி முதல் வழக்கமான அட்டவணைப்படி சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
பூவை ஜெகன் மூர்த்தி கடத்தல் வழக்கு ஒத்திவைப்பு

சிறுவனை கடத்தியதாக பூவை ஜெகன்மூர்த்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பெண்ணின் தந்தை வனராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், தற்போது சமரசம் ஏற்பட்டு திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது வழக்கு விசாரணை செப்.17 ஒத்திவைக்கப்பட்டது.