News September 11, 2025

5 டன் விதைகள் விற்பனை செய்ய தடை

image

திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள போளூர், கலசபாக்கம், கீழ்பென்நாத்தூர் ஆகிய வட்டரங்களில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா நேற்று ( செப்டம்பர் 10) ஆய்வு மேற்கொண்டார். அப்போது வைக்கப்பட்டிருந்த விதை குவியல்களில் 20 விதை மாதிரிகளில் முளைப்புத்திறன் மற்றும் புறத்தூய்மை அற்ற ஐந்து டன் விதைகள் கண்டறியப்பட்டு அதற்கு தடை விதிக்கப்பட்டது.

Similar News

News September 12, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (11.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 11, 2025

அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு

image

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் முன்னிலையில் இன்று (11.09.2025) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 11, 2025

தி.மலை: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

image

தி.மலை மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!