News September 11, 2025
செப்.13 ல் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)

தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் மூலம் வருகின்ற செப் 13-ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை சுமூகமாக தீர்க்க விரும்பும் வழக்காடிகள், வழக்கறிஞர்கள் அனைவரும் நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயனடையலாம் என நீதிபதி சொர்ணம் J.நடராஜன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
தேனி: 13 போலீசார் பணியிட மாற்றம்..!

தேனி மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றிய சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உதயசந்திரன், சந்திரன், நாகராஜ், கருப்பையா, நாராயணசாமி, சுந்தரம், போலீசார் செந்தில்குமார், தீபா, ரேவதி மற்றும் மாவட்டத்தில் பிற போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய போலீசார் எழில் வளவன், ஸ்டாலின், பாண்டியராஜ், சிறப்பு எஸ்.ஐ., மகேஸ்வரி ஆகிய 13 பேரை வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. சினேஹா பிரியா உத்தரவிட்டுள்ளார்.
News September 11, 2025
நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் இயற்கை வேளாண் சாகுபடி முறையை பின் பற்றும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும். பரிசு ரூ.2 லட்சம், பதக்கம் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் செப்.15க்குள் பதிவு கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். என வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
போடி: கடன் தொல்லையால் ஒருவர் தற்கொலை

போடி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன் (50). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் குடும்ப செலவிற்காக அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்து வந்த தயாளன் நேற்று (செப்.10) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.