News September 11, 2025
கோவையில் சிக்கிய அரசு அதிகாரி!

கோவை, கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர், தனது நிலத்தை வரைமுறைப்படுத்துவதற்காக ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்றபோது, ஊராட்சி செயலர் முத்துசாமி ரூ.10,000 லஞ்சமாகக் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தங்கராஜ், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு முத்துசாமியை கைது செய்தனர். மக்களே உங்களிடன் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் 0422-2449550 அழைத்து புகார் அளியுங்கள்.SHAREit
Similar News
News September 11, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (11.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
சார்பதிவாளர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம்

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார் பதிவாளர் அறையில் இருந்த கணக்கில் வராத ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணம் எப்படி வந்தது ? என்பது குறித்தும், பணத்தை அங்கு போட்டவர் யார்? என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 11, 2025
கோவை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வடகோவை ரயில் நிலையத்தில் தண்டவாளம் மாற்றும் பணி நடைபெறுவதால், போத்தனூர் – மேட்டுப்பாளையம் (66616-67) மெமு ரயில்கள் நாளை (செப்.12) ரத்து செய்யப்படுகிறன. திருச்சி பாலக்காடு டவுன் (16843) ரயில் நாளை, போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் சிங்காநல்லூர், பீளமேடு, வடகோவை ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. இதற்கு ஏற்றார்போல் பொதுமக்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.