News September 11, 2025
அரியலூர்: இலவச சட்ட உதவி வேண்டுமா?

அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் (செப்.13) நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமரசம் செய்துக் கொள்ளலாம் என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான மலர்வாலண்டினா தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றங்களில் செயல்படும் சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329 223333 தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
Similar News
News September 11, 2025
அரியலூரில் நிமிர்ந்து நில் திட்டப் பயிற்சி தொடக்கம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாடு (EDII TN) சார்பில், தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிமிர்ந்து நில் நிகழ்ச்சி உயர் கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சியாக தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தொடங்கி வைத்தார்.
News September 11, 2025
இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி கல்லூரி முதல்வர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
News September 11, 2025
அரியலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் அவர்கள் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி முன்னிலை வகித்தார்.