News September 11, 2025

புதுக்கோட்டையில் 20,000 டன் நெல் கொள்முதல் இலக்கு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இவ்வாண்டு 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 20,000 டன் நெல்லைக் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார். கடந்தாண்டு 45 நிலையங்கள் மூலம் 15,218 டன் நெல் வாங்கப்பட்டு ரூ.36.78 கோடி விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டது. நெல்லை பாதுகாப்பாக சேமித்து பணம் நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News November 3, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.02) இரவு 10 மணி முதல் இன்று (நவ.03) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 2, 2025

புதுக்கோட்டை மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை வழியாக திருச்சி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் திருச்சியிலிருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் மறு மார்க்கமாக மானாமதுரையில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட நாட்களில் வண்டி எண்: 16845, அதேபோல் வண்டி எண்: 16486, 16849 ஆகிய ரயில் வண்டிகளும் குறிப்பிட்ட தேதிகளில் இயங்காது என தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

News November 2, 2025

புதுகைக்கு சரக்கு ரயிலில் வந்த 1300 டன் உரங்கள்

image

புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாய பணிகளுக்கு தேவையான 1300 டன் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா 723 டன், டிஏபி 255 டன், NPK 127 டன், அமோனியம் 190 டன் தூத்துக்குடியில் இருந்து இன்று (நவ.02) புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியது. புதுக்கோட்டை விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!