News September 11, 2025
திருப்பத்தூர்: சொந்த ஊரில் அரசு வேலை!

திருப்பத்தூர், ஊரக வளர்ச்சி & ஊரகத் துறை சார்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
▶️ஈப்பு ஓட்டுநர்-ரூ.19,500-ரூ.71,900
▶️பதிவறை எழுத்தாளர்- ரூ.15,900-ரூ.58,500
▶️அலுவலக உதவியாளர்-ரூ.15,700-ரூ.58100
▶️இரவு காவலர்-ரூ.15,700-ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
▶️கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
▶️விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்., 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் <
ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 11, 2025
உதவி ஆய்வாளருக்கு எஸ்.பி பாராட்டு!

வாணியம்பாடி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறப்பாக செயல்பட்டதற்கு, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். காவலர்கள் பலர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 11, 2025
திருப்பத்தூர்: விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

வாணியம்பாடியில் உள்ள கோட்டாச்சியர் அலுவலகத்தில் வரும் (12.09.2025) தேதி ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி வட்டத்திற்க்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கோட்டாச்சியர் அஜிதா பேகம் தலைமையில் நடைப்பெற உள்ளது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில் விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கோட்டாச்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
News September 11, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு இன்று (11-09-2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் ஒருவழிப் பாதையில் எதிர் புறமாக வாகனத்தை இயங்குவது சட்டப்படி குற்றமாகும். இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சாலை விதிகளை மதிப்போம், விபத்து ஏற்படாமல் தடுப்போம் என செய்தி வெளியிட்டுள்ளது.