News April 11, 2024
திருச்சி கோர்ட்டில் சமரச தின விழப்புணர்வு ஊர்வலம்

தமிழ்நாடு மாநில சமரச தேர்வு மையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருச்சி ஒருங்கிணைந்த கோர்ட்டில் நேற்று சமரச தீர்வு மையத்தின் சார்பாக 19வது ஆண்டு சமரச விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை திருச்சி மாவட்ட நீதிபதி பாபு தொடங்கி வைத்தார். ஊர்வலம் திருச்சி கோர்ட்டில் இருந்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் திருச்சி கோர்ட்டுக்கு வந்தடைந்தது.
Similar News
News July 7, 2025
திருச்சி: டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மணப்பாறை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நாளை மணப்பாறை பகுதியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று திருச்சி வந்தடைந்தார். அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அமமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
News July 7, 2025
திருச்சி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News July 7, 2025
திருச்சி: சொந்த ஊரில் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 104 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! <<16974036>>(பாகம்-2)<<>>