News September 11, 2025
மெரினா பீச்சில் இப்படியா?

மெரினா கடற்கரையில், நீலக்கொடி கடற்கரை என அறிவிக்கப்பட்ட, 20 ஏக்கர் பகுதியை மட்டும் சுத்தமாக வைப்பதில் மாநகராட்சி கவனம் செலுத்தி வருகிறது. அதையொட்டியுள்ள மற்ற பகுதிகளில் ஆங்காங்கே, கண்ணாடி பாட்டில் கள் உடைந்து கிடப்பது, கடற்கரைக்கு வருவோரின் கை, கால்களை பதம் பார்த்து வருகிறது. இது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 11, 2025
சென்னை: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு

சென்னையில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் தொகையை செலுத்தினால் மட்டுமே இன்சுரன்ஸ் புதுபிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது சென்னை மாநகர காவல்துறை. அபராத நிலுவை தொகை ரூ.300 கோடி நிலுவையில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வாகன பரிவாஹன் என அனைத்து இன்சூரன்ஸ் இணைந்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 11, 2025
சென்னையில் தூய்மை பணியாளர்களின் சம்பளம் உயர்வு

ராயபுரம் மற்றும் திருவி.க.நகர் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் தினசம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி பணியின் வகைபோல் தினசம்பளம் ரூ.761 முதல் ரூ.965 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மாத வருமானம் சுமார் ரூ.19,700 முதல் ரூ.25,000 இருக்கும். ஊழியர்களுக்கு கட்டண விடுப்பு, காப்பீடு, மருத்துவ பரிசோதனை, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவைகளும் வழங்கப்பட உள்ளன.
News September 11, 2025
சென்னை வரும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் செப்.14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை வருகிறார். தொடர்ந்து ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக பாஜக சார்பில் பல இடங்களில் கட்சிக் கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொண்டு ஜிஎஸ்டி பற்றிய விளக்கவுரை அளிக்கவுள்ளார்.