News September 11, 2025

கம்பம் – நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற மனு

image

கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 22 வார்டு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து தமிழ்நாடு நகர நிர்வாக சட்டம் 1998 51ன்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டி கம்பம் நகர ஆணையாளரை தொடர்ந்து தேனி ஆட்சியரிடம் (செப்.10) நேற்று மனு அளித்தனர்.

Similar News

News September 11, 2025

தேனி: 13 போலீசார் பணியிட மாற்றம்..!

image

தேனி மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றிய சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உதயசந்திரன், சந்திரன், நாகராஜ், கருப்பையா, நாராயணசாமி, சுந்தரம், போலீசார் செந்தில்குமார், தீபா, ரேவதி மற்றும் மாவட்டத்தில் பிற போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய போலீசார் எழில் வளவன், ஸ்டாலின், பாண்டியராஜ், சிறப்பு எஸ்.ஐ., மகேஸ்வரி ஆகிய 13 பேரை வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. சினேஹா பிரியா உத்தரவிட்டுள்ளார்.

News September 11, 2025

நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தில் இயற்கை வேளாண் சாகுபடி முறையை பின் பற்றும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும். பரிசு ரூ.2 லட்சம், பதக்கம் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் செப்.15க்குள் பதிவு கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். என வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2025

செப்.13 ல் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)

image

தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் மூலம் வருகின்ற செப் 13-ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை சுமூகமாக தீர்க்க விரும்பும் வழக்காடிகள், வழக்கறிஞர்கள் அனைவரும் நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயனடையலாம் என நீதிபதி சொர்ணம் J.நடராஜன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!