News September 11, 2025
காலையில் உடல் சுறுசுறுப்பாக இருக்க இந்த தேநீர் குடிங்க!

சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், உடலை சுறுசுறுப்பாக்கவும் மசாலா டீ உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* கிராம்பு, பச்சை ஏலக்காய், மிளகுத்தூள், இலவங்கப்பட்டை & பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
*இதனுடன் ஜாதிக்காய், உலர்ந்த இஞ்சி தூள் & குங்குமப்பூ சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.
*டீ செய்யும் போது, அதில் இந்த பொடியை கலந்தால், மசாலா டீ ரெடி. SHARE IT.
Similar News
News September 11, 2025
10-வது போதும்! மத்திய அரசில் ₹69,100 சம்பளத்தில் வேலை!

உளவுத்துறையில் காலியாக உள்ள 455 Security Assistant பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18- 27 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கார் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். 3 கட்டங்களாக தேர்ச்சி நடைபெறும். அதிகபட்சமாக ₹69,100 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News September 11, 2025
BREAKING: கவர்னர் ஆகிறாரா H.ராஜா?

சி.பி.ஆர் துணை ஜனாதிபதியாக தேர்வானதை அடுத்து, அவர் வகித்த கவர்னர் பதவி (மகாராஷ்டிரா) கூடுதல் பொறுப்பாக குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சி.பி.ஆருக்கு பதில் மீண்டும் ஒரு தமிழரை மகாராஷ்டிரா கவர்னராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இந்த ரேஸில் <<17440874>>H.ராஜா<<>>, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால், H.ராஜா கவர்னராக தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News September 11, 2025
அதிமுகவின் பிரச்னைகளுக்கு பாஜகதான் காரணம்: திருமா

அதிமுகவும், அதன் தலைவர்களும் சுதந்திரமாக செயல்படவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு முழு காரணம் பாஜகதான் என்பதை மக்கள் அறிவார்கள் எனவும் கூறியுள்ளார். பாஜக குறித்து தெரிந்துகொண்டு, அதிமுக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் மட்டும் கட்சியை காப்பாற்ற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். திருமாவின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?