News September 11, 2025

விருதுநகர்: 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை

image

காரியாபட்டி அருகே திருமால், சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி ராஜலெட்சுமி (22) பிரசவத்திற்காக காரியாபட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸை நிறுத்தி ஊழியர்கள் பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் உதவியாளர் மற்றும் ஓட்டுநரை அனைவரும் பாராட்டினர்.

Similar News

News September 11, 2025

தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்.13,14 அன்று 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் இனிவரும் மாதங்களில் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்படி திட்டப் பணிகளுக்கு அவரவர் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

News September 11, 2025

விருதுநகர்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை..!

image

விருதுநகர், விளாம்பட்டி சுப்பிரமணிபுரத்தை சேர்ந்த வாலிபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் குழந்தைகள் வன்கொடுமை குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ‌வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.40,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். ‌குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவில் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என SP கண்ணன் எச்சரித்துள்ளார்.

News September 11, 2025

விருதுநகர்: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரையில் நடைபெறுகிறது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

error: Content is protected !!