News September 11, 2025

மறைமலைநகர் அருகே சிறுவனுக்கு சூடு வைத்த கொடூரம்

image

மறைமலைநகர் பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக, மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று, போலீசார் விசாரித்தனர். இதில், சிறுவனின் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சிறுவனின் தந்தையும், சித்தியும் சேர்ந்து, சிறுவனை தாக்கி, உடலில் பல்வேறு இடங்களில் சூடு வைத்தது தெரிந்தது.

Similar News

News September 11, 2025

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மழை அலர்ட்

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று(செப்.11) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியால் மழை பெய்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க.

News September 11, 2025

சிட்லப்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

image

நாமக்கல்லைச் சேர்ந்தவர் கந்தன் (26). இவர் சிட்லப்பாக்கம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வீடு அடித்தளம் கட்ட தோண்டிய பள்ளத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற மின் மோட்டாரை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிட்லப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

News September 11, 2025

செங்கல்பட்டு: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்

image

செங்கல்பட்டு, பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. வரும் செப்.21-ம் தேதியே கடைசி நாள். (உடனே SHARE பண்ணுங்க)

error: Content is protected !!