News September 11, 2025
சாலையின் தரத்தினை ஆய்வு செய்த ஆட்சியர்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா நேற்று கலவை பேரூராட்சி புதுகாலனியில் ரூ.55 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையின் தரத்தினை ஆய்வு செய்தார். உடன் பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அம்சா, வட்டாட்சியர் சரவணன். செயல் அலுவலர் ஜெய்குமார் மற்றும் பலர் உள்ளனர்.
Similar News
News September 11, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (செப்-12) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை டேக் ஹோண்டா கிளப் TNHB அரக்கோணம், வன்னியர் திருமண மண்டபம் தென் வன்னியர் தெரு சோளிங்கர், ராகவேந்திரா மஹால் அவளூர், செயின்ட் ஜான் பள்ளி தென்றல் நகர் சீகராஜபுரம் ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.பொதுமக்கள் மகளிர் உரிமை தொகை, புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம்.
News September 11, 2025
சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசிய நபர் கைது

வாலாஜா சார்ந்த புகைப்படக் கலைஞர் கிருஷ்ணன், தனது சமூக வலைத்தளத்தில் இரு மதத்திற்கு இடையே பிரிவினையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். இதைதொடர்ந்து, ராணிப்பேட்டை, மேல்விஷாரம் மற்றும் வாலாஜாவைச் சேர்ந்த தமுமுக, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, மஜக உள்ளிட்ட நிர்வாகிகள் வாலாஜா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், காவல்துறையினர் கிருஷ்ணனை கைது செய்தனர்.
News September 11, 2025
ராணிப்பேட்டை: தாய், மகன் விபரீதம்

அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்தவர் மதன சேகர் (54). விபத்தில் சிக்கியதால், தன்னை கவனிக்க யாரும் இல்லாத மனவேதனையில், தனது தாயார் புனிதவதி (72) உடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மனைவி மற்றும் ஒரே மகன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்னையில் வசிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.