News September 11, 2025

திருவட்டாறு பெருமாள் கோயிலில் 14ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா

image

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 14ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் சபா மண்டபத்தில் தொட்டில் அலங்கரிக்கப்பட்டு, அதில் ஸ்ரீ கிருஷ்ணன், பலராமன் ஐம்பொன் விக்கிரகங்கள் வைக்கப்படுகிறது. பக்தர்கள் தொட்டிலை ஆட்டி மகிழலாம். தொடர்ந்து பாகவதம் வாசிக்கப்படுகிறது. நள்ளிரவு 12 மணி அளவில் கலச பூஜை, அபிஷேகம், தீபாராதனையுடன் கிருஷ்ண ஜெயந்தி விழா நிறைவடைகிறது.

Similar News

News September 11, 2025

குமரியில் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

image

குமரி, குழித்துறை தெற்றிவிளை வீட்டை சேர்ந்தவர் அஜித் (31), இவர் குழித்துறை நகராட்சியில் டெம்போ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று 9-ம் தேதி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்றவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரது மனைவி ஆஷா களியக்காவிளை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை.

News September 10, 2025

குமரி எஸ்.பி எச்சரிக்கை

image

தேங்காபட்டினம் மாதாபுரம் பகுதி ஜெயின் மெலார்டு (46) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின்பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News September 10, 2025

ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் 2500 பேருக்கு சிகிச்சை

image

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி 2500 வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் என கல்லூரி முதல்வர் லியோடேவிட் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் 1000-க்கும் அதிகமானோர் வருவதாக கூறிய அவர் மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நாளுக்கு நாள் நோயாளிகள் வருகை அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!