News September 11, 2025
பெரம்பலூர்: மின்சாரம் தாக்கி பெண் விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரேவதி (35) என்பவர் தனது தாயுடன் சோழப் பயிருக்கு பூச்சி மருந்து அடிப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை தனது இடது காலால் மிதித்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 11, 2025
பெரம்பலூர் மக்களே இன்று இங்கே போங்க!

பெரம்பலூர் மக்களே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உங்கள் ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, மகளிர் உரிமை தொகை, மருத்துவ காப்பீடு, முதியோர் தொகை போன்ற சேவைகளை எளிய முறையில் பெற முடியும். நமது பெரம்பலூர் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள்
இன்று 11.09.2025
✅வேப்பந்தட்டை ( வாளிகண்டாபுரம்)
✅வேப்பூர்( திருமாந்துறை)
நாளை 12.09.2025
✅ஆலந்தூர்( கீழுமாத்தூர்)
அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 11, 2025
பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரம்பலூர் வட்டம், அம்மாபாளையம், களரம்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அம்மாபாளையம் ராஜம்மாள் பரவாசு திருமண மண்டபத்திலும், ஆலத்தூர் வட்டம் மேலமாத்தூர், இலந்தங்குழி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மேலமாத்தூர் ஆனந்த் மஹாலிலும் (10.09.2025) நடைபெற்றது.
இதில் அம்மாபாளையத்தில் நடந்த முகாமினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
News September 11, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (செப்.10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.