News September 10, 2025
மதுரை மதுபான கடைகளை அடைக்க ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள், மனமகிழ் மன்றங்களை நாளை (செப்.11) அடைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் பொதுமக்களை இன்று (செப்.10) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்த அமைச்சரிடம் பொதுமக்கள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.
News September 10, 2025
மதுரை: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள்<
News September 10, 2025
மதுரை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா சிந்தனை அரங்கம்

மதுரை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா 2025 சிறப்பாக நடைபெறுகிறது. செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு திமுகக் கலையரங்கம், மதுரையில் சிந்தனை அரங்கம் நடைபெறும். இதில் “எட்டு வழிசாலை” நூலாசிரியர் முத்தையா மரபின் மைந்தன் தலைப்பு உரையாற்றுகிறார். “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற தலைப்பில் தமிழ் இளவர் மதுரை வி. ராமகிருஷ்ணன் பேசுகிறார். அனைவரும் வருகை தந்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் அழைக்கிறது.