News September 10, 2025
சின்னமனூர் வட்டாரம் கல்வி அலுவலர் தற்கொலை

சின்னமனூர் வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குமார்(49) இவர் (செப்.09) நேற்று நண்பகல் வேளையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவல் பெயரில் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்பத்தார் கொடுத்த புகாரின் பெயரில் அல்லிநகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு மார்க்கையன்கோட்டையில் இவரது இறுதி ஊர்வலம் நடந்தது.
Similar News
News September 11, 2025
வைகை அணை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எம்பி

பெரியகுளம் அருகே வைகை அணை பகுதியில் இன்று மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் சார்பாக அணை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேனி எம்.பி தங்கத்தின் செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் கலந்து கொண்டு வைகை அணை பாதுகாப்பு குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வைகை அணைப்பகுதியில் பார்வையிட்டனர்.
News September 10, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (செப்10) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News September 10, 2025
தேனி: அரசுப் பணிக்கு இது ரொம்ப முக்கியம்..!

அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், பாடத்திட்டங்கள் மற்றும் அது குறித்த சந்தேகங்களுக்கு இனி எங்கும் தேடி அலைய தேவையில்லை. TNPSC, TNUSRB, TRB மற்றும் RRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்களை, மென் பாடக்குறிப்புகளாக அரசு இணையத்தில் பதிவேற்றியுள்ளது. இனி பாடத்திட்டங்களை <