News September 10, 2025
கடலூர் மாவட்டம் ஒரு பார்வை!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடலூர் மாவட்டம் மிக முக்கிய நகரமாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. தற்பொழுது கடலூர் மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதிகள், 2 நாடாளுமன்ற தொகுதிகள், 3 கோட்டங்கள், 10 தாலுகாக்கள், 32 உள்வட்டம் மற்றும் 883 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
Similar News
News March 4, 2026
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?.. APPLY

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News March 4, 2026
கடலூர்: தவாகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று 10-க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து கொண்டனர். இதையடுத்து விருதாச்சலம் நகர செயலாளர் இளையராஜா தலைமையில், புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நகர மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News March 4, 2026
கடலூர்: கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களை, மறுசீரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 2313 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 2,590 வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


