News September 10, 2025
கிருஷ்ணாபுரத்தில் அமைச்சர் கோவி செழியன் பேட்டி

ஆளுநர் ஒப்புதல் தரவேண்டிய, கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு, ஒப்புதல் தராமல், பல மாதங்கள் கிடப்பில் போட்டு, அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பியிருப்பதன் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தையும், தமிழ் மக்களையும் வஞ்சிக்கிறார் என்பதும், தமிழக உயர்கல்வி முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது என இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி.
Similar News
News March 17, 2026
தஞ்சை: BE / B.tech முடித்தால் வங்கி வேலை!

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E. / B.tech.
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 17, 2026
2026 தேர்தல்: தஞ்சை கலெக்டர் அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தஞ்சை, ஒரத்தநாடு திருவையாறு ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 2 தொகுதி களுக்கான வாக்கு எண்ணிக்கை பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் நடக்க உள்ளது.
News March 17, 2026
தஞ்சை: டாக்டரிடம் ரூ.6.90 லட்சம் அபேஸ்!

தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம், இணையவழி வர்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி வாட்ஸ்ஆப் மூலம் ஆசை காட்டி ரூ.6.90 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


