News September 10, 2025
விழுப்புரம்: கல் மண்டபங்கள் சிதைவு – பாதுகாக்க கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவ மற்றும் நாயக்கர் கால கல் மண்டபங்கள், போதிய பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. பனமலை, திருக்குணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்த மண்டபங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. மாணவர்கள் விளையாடும் ஆபத்தான இடங்களாகவும் மாறியுள்ளன. எனவே, தொல்லியல் துறை இவற்றைச் சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Similar News
News September 10, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
விழுப்புரம் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

விழுப்புரம் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News September 10, 2025
பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை அரசு செம்மண் குவாரியில் விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி எம்எல்ஏ மீது 2012 ஆம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை விழுப்புரம்மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்நடந்து வரும் நிலையில் நேற்றுஓய்வு பெற்ற டிஎஸ்பிவிஜயராகவன் சாட்சியம்அளித்த நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு