News September 10, 2025

கோவை: அரியர் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

image

கோவை அரசு கலைக் கல்லூரியில் 2017 வரை இளநிலை, முதுநிலை படிப்பில் சேர்ந்தும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அக்.–நவ. பருவத் தேர்வுகளில் நிலுவைத் தேர்வை எழுதலாம். விண்ணப்பம் இன்று முதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் கிடைக்கும். விண்ணப்பத்தை செப்டம்பர் 19க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 10, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (10.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

கோவையில் நூதன மோசடி: போலீசார் எச்சரிக்கை!

image

கோவையில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை உள்ள 7 மாதங்களில் மட்டும் சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் ரூ.1,010 கோடியை இழந்தனர். சைபர் கிரைம் மோசடி தொடர்பாக 7 மாதத்தில் 88,479 புகார்கள் பெறப்பட்டுள்ளன. சைபர் கிரைம் மோசடியில் இழந்த பணத்தில் ரூ.314 கோடியை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். டிஜிட்டல் கைது மூலமாக பொதுமக்கள் ரூ.97 கோடியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. சைபர் குற்றங்களுக்கு புகார் அளிக்க 1930.

News September 10, 2025

கோவையில் இலக்கை அடைய இலவச பயிற்சி!

image

கோவை இளைஞர்களே தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 600 காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் தேர்வுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கான எழுத்து தேர்வு நவம்பர் 09ம் தேதி நடைபெறும். இந்தநிலையில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்!SHARE

error: Content is protected !!