News April 11, 2024

இரு நாட்கள் அரசியல் விளம்பரங்கள் செய்ய தடை

image

வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப்.18 மற்றும் வாக்குப் பதிவு நாளான ஏப்.19 ஆகிய இரு நாட்களில் அரசியல் கட்சிகளோ , வேட்பாளா்களோ , அல்லது தனியாா் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ, மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதியின்றி தோ்தல் சம்பந்தமான விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Similar News

News July 8, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜூலை 08)இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News July 8, 2025

குரூப்-IV தேர்வை முன்னிட்டு அலுவலர்களுக்கு ஆலோசனை

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள குரூப்-IV தேர்வை (ஜூலை 12, 2025) முன்னிட்டு, தேர்வுப் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா ஆலோசனைகள் வழங்கினார். தேர்வர்கள் காலை 9 மணிக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள். அரைமணி நேரத்திற்கு முன் வர வேண்டும். அடையாள அட்டை, ஹால் டிக்கெட் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

News July 8, 2025

JUST NOW: அரக்கோணத்தில் ரயில் சேவை பாதிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் – சென்னை ரயில் தடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததில், 90 நிமிடங்களுக்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்கம்பிகளை சரி செய்யும் முயற்சியில், ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அரக்கோணம் ரயில் நிலையத்தில் சதாப்தி , இண்டர்சிட்டி ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

error: Content is protected !!