News April 11, 2024

23 இன நாய்களுக்கு மத்திய அரசு விதித்த தடை ரத்து

image

பிட் புல் உள்ளிட்ட 23 இன நாய்களுக்கு மத்திய அரசு விதித்த தடையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என அடையாளம் காணப்பட்ட 23 இன நாய்களுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிய ஆலோசனைக்கு பிறகு, புதிதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கலாம் எனக் கூறி, தடையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Similar News

News July 9, 2025

B.Ed. சேர்க்கை விண்ணப்பம் இன்றுடன் நிறைவு

image

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed. படிப்பிற்கான விண்ணப்பம் இன்றுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது. இதனையடுத்து ஜூலை 18-ல் தரவரிசை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து ஜூலை 21-25 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 28-ல் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு, முதலாமாண்டு வகுப்புகள் ஆக.6-ல் தொடங்கவுள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News July 9, 2025

தமிழகத்தில் இன்று பஸ், ஆட்டோ ஓடுகிறதா? புது அப்டேட்

image

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் சற்று குறைந்த அளவில்(80%) அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை, குமரி, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. புதுச்சேரியில் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் சற்று பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவையில் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 9, 2025

கணக்கு வாய்ப்பாடு.. பள்ளிகள் ஆய்வில் ஷாக் ரிப்போர்ட்!

image

6-ம் வகுப்பு மாணவர்களில் 53% பேருக்கு மட்டுமே 10-ம் வாய்ப்பாடு வரை மட்டுமே தெரிவது கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் & தனியார் என 74,229 பள்ளிகளில் 21.15 லட்சம் மாணவர்கள், 2.70 லட்சம் ஆசிரியர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். அதேநேரம், மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனராம். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!