News September 10, 2025
மதுரை: மகனை குத்தி கொலை செய்த தந்தை

எழுமலை அருகே துள்ளுக்குட்டி நாயக்கனூரை சேர்ந்தவர் பாண்டி(45)யின், மனைவி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். துக்கம் விசாரிக்க வந்த இவரது தந்தை மாரியப்பனுக்கும்(75), பாண்டிக்கும் நேற்று. இரவு தகராறு ஏற்பட்டபோது பாண்டி தந்தை மாரியப்பனை கட்டையால் தாக்க, ஆத்திரமடைந்த மாரியப்பன் தனது மகன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மாரியப்பனை கைது செய்தனர்.
Similar News
News September 10, 2025
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் பொதுமக்களை இன்று (செப்.10) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்த அமைச்சரிடம் பொதுமக்கள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.
News September 10, 2025
மதுரை மதுபான கடைகளை அடைக்க ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள், மனமகிழ் மன்றங்களை நாளை (செப்.11) அடைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News September 10, 2025
மதுரை: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள்<